Rste

சென்னையில் தமிழ் மொழியே தனது மூச்சாகவும் பேச்சாகவும் கருதும் ஒரு தமிழர் !

chinnappa-tamilar-rste.org

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தமிழம்மா பதிப்பகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிப்பகத்தை நடத்துபவர் சின்னப்ப தமிழர் (படத்தில் இருப்பவர்) . இவர் நிறைய புத்தகங்கள் எழுதி வெளியுட்டுள்ளார் . அனைத்தும் தமிழ் மொழிக்கு அவர் செய்த தொண்டுகள் தான். தமிழ் தேசியத்தை மூச்சாகவும் , தமிழ் மொழியை உயிராகவும் கருதி தன வாழ்கையை நடத்தும் ஒரு எளிய மனிதர். இந்த புத்தகங்கள், நாட்காட்டிகள் முதலியவற்றை தமிழர் நிகழ்வுகளுக்கு சென்று விற்று வருவார். இவரை அறியாத [...]

சிந்து சமவெளி – தொடரும் இந்தியாவின் துரோகம்

Australia-origin

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய [...]

இவர் நம்பிக்கையோடு உழைத்தார்!!

bill-gates-2

பில்கேட்ஸ் உழைப்பால் உயர்ந்த ஒரு மாமனிதர் !! ஃமைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 35 வருடம் முடிகிறது. விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது. பில்கேட்சின் வரலாறு :- இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது [...]

மீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை – அனலை நிதிஸ் ச. குமாரன்

karunanidhi_jayalalitha

போரை வெற்றிகொள்ள களம் இருந்தால் மட்டும் போதாது. புறநிலைக் களம் மற்றும் மக்களின் ஆதரவுகள் இருந்தால்த்தான் போரை வெற்றிகொள்ள முடியும் என்பதுதான் நியதி. இறுதிப் போர் நடைபெற்ற வேளையில் தமிழகம் புறநிலைக் களமாக இருந்திருந்தால் தமிழீழத் தனியரசை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கியிருக்க முடியும். 1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள் தமிழீழம் அடையும் நோக்கத்திற்கு தடையாக இருந்தது. 1991-ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளுக்கு முன்னர் பல ஆண்டுகள் தமிழ் போராளி அமைப்புக்களுக்கு இடையே [...]

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பொறிக்குள் சிக்கும் அபாயம்-இதயச்சந்திரன்

money

உலகளவில், 2011 ஆம் ஆண்டிற்கான படைத்துறைச் செலவீனம் தென் ஆசியப் பிராந்தியத்தில் மிக உயர்வாக இருப்பதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆய்வு மையம் (SIPRI) தெரிவிக்கிறது.அது பாகிஸ்தானில் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 2.8 சதவீதமாகவும், இந்தியாவில் 2.7 சதவீத இருக்கும் அதேவேளை, இலங்கையில். 3 சதவீதமாக உள்ளது. ஆகவே, உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்தாலும் இலங்கையின் படைத்துறைச் செலவு அதிகரிப்பதையிட்டு உலக வங்கியோ அல்லது அனைத்துலக நாணய நிதியமோ கேள்வி கேட்பதில்லை.ஆனாலும், இறுதிக் கொடுப்பனவான [...]

தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்

thanthai-selva

தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேசன்துறை) இலங்கையில் 1918-இல் “இலங்கை தேசிய காங்கிரஸ்’ எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, “தமிழ் லீக்’ (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க “தனிநாடு’ வேண்டும் என்பதாகும். பின்னர் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் அமைந்த ஆணைக்குழுவின் முன் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் [...]

தமிழகத்தில் மின் பற்றாக்குறை என்பது உண்மைதானா? – இரா. முரளிதரன்

electricity-tamilnadu

மின்சாரம் இன்றி ஒரு அணுவும் அசையாது. இன்று ஒரு நாட்டின் மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கின்ற முதன்மைக் காரணியாக மின்சாரம் திகழ்கிறது. கல்வி அடிப்படைக் கட்டுமான வசதி மற்றும் இணக்கமான சூழல் போன்ற காரணங்களால் தமிழகம் தொழில்துறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மின் தட்டுப்பாடு தமிழகத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தி வருகிறது. எதிர்கால மின்சாரத் தேவைகளை கருத்தில்கொண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாத நிலையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சில சக்திகள் இந்த மின்தட்டுப்பாட்டை உருவாக்க முயற்கின்றனவோ என்ற சந்தேகம் [...]

உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை..!!-ஞாநி

Koodankulam_370

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா? 2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா? 3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் [...]

அனைவரின் சிறந்த ஆசான்..! -சேனா சரவணன்

books

ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம். ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக  (WORLD BOOK AND COPYRIGHT DAY) கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோ சார்பில் 1996, ஏப்ரல் 23-ம்  தேதி ஜெனிவாவில் உலகப் பதிப்பாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது, ஆண்டுதோறும்  ஏப்ரல் 23-ம் தேதியன்று ‘உலகப் புத்தக தினம்’ கொண்டாட தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 23-ம் தேதி ஆங்கில நாடக இலக்கிய [...]

இந்தியக் குழுவின் சுற்றுலாப் பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம்-அனலை நிதிஸ் ச. குமாரன்

sushma

சிறிலங்காவிற்கு பயணத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் மகிந்தாவின் அமைச்சர்களையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளையும் கேட்டுத்தான் மூச்சுக்கூட விடுகிறார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள். இந்தியக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து இடங்களும் இதற்காகவே முன்னரே தயார் செய்யப்பட்டவை. என்ன பேச வேண்டும் என்கிற பாடம் எடுத்த பின்னரே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் மட்டுமே இந்தியக் [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

May 2012
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins