
நவம்பர் 2011 மற்றும் ஜனவரி 2012 மாதங்களில் வெளிவந்த சங்க முழக்கம் இதழ்களில் கூடங்குளம் அணு உலை திட்டதிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் வாசகர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். முதலில் போராட்டத்தின் தன்மைகள் குறித்தும், இரண்டாவது அணு உலையின் அவசியம் குறித்தும் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மீதான விளக்கங்களை இப்போராட்டத்தை துவக்கம் முதலே உற்று நோக்கி வருபவன் என்ற முறையில் [...]

தமிழ்நாட்டில் சாதி-மத மறுப்புத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. அகமண முறையில் இறுக்கமாக நிலவி வரும் சாதி அமைப்பு, மெல்ல மெல்ல உடைபடத் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பெரியார் இயக்கம் தொடங்கி வைத்த சாதி எதிர்ப்பு மற்றும் கல்வி உரிமைப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இதை கருத வேண்டும். நகர்ப்புறத்தில் குறிப்பாக சென்னையில் சாதி-மத மறுப்பு திருமணங்கள் அதிகரித்துள்ளன. வேகமாக மாறி வரும் இந்த சமூகப் போக்கு சமூக செயல்பாட்டாளர்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி யிருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (பிப்.14) எழுதியுள்ளது. [...]

‘தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர். தமது பிராந்திய பூகோள நலன்களுக்கு ஏற்றவாறு மனித உரிமை மீறல் என்கிற கருத்து நிலையை நிறுவுவதன் ஊடாக, கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை நிராகரிக்கும் வல்லரசாளர்களின் போக்கு இன்றுவரை மாறவில்லை என்பதனை [...]

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை [...]

ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது.சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கு நெருக்கடியும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் இலங்கையின் திறைசேரியை ஆட்டம் காண வைக்கிறது. இந்த வாரம், அனைத்துலக குற்றவியல் நீதித்துறை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அத்தோடு மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜாங்க [...]

தன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் அது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். அந்தக் குறுகிய காலத்திற்குள் [...]

ஈழத்தமிழருக்கு நேர்ந்த மனிதப் பேரவலங்களுக்கு ஐ.நா.வினாலோ அல்லது சர்வதேச சமூகத்தினாலோ நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி இன்று நேற்றல்ல கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கேட்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் பணியாளர்கள் மற்றும் பிற நாடுகளின் ஊழியர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். குறித்த நாடுகளினாலோ அல்லது ஐ.நா.வினாலோ எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்காவிற்கு எதிராக எடுக்கப்படாமல் போய்விட்டது. ஐந்தாம் கட்ட ஈழப் போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேசப் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற [...]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார். இவர்கள் இருவருடைய சிறிலங்காவிற்கான பயணத்தின் நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவமானவை. சிறிலங்காவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்கிற செய்தியைத்தான் இரு தலைவர்களும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இந்தியாவிற்கே ஆபத்தாக அமைந்துவிடும். நூறு [...]

1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது. 30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக எஸ். நடேசன், டாக்டர் நாகநாதன், பெரி. சுந்தரம் அவர்களும், நியமிக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக சி. குமாரசுவாமி, சேர் சிற்றம்பலம் கார்டினர் மற்றும் முதலியார் ஏ.பி. [...]

இலங்கைக் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற கடற்புலிகளின் தளபதி சூசையின் துணைவி த நேசன் என்னும் ஆங்கில வார இதழுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார். கொழும்பிலிருந்து வெளியாகும் “த நேசன்” என்கிற ஆங்கில வார இதழுக்காக சாமரா லக்ஷன் குமார, சூசையின் துணைவி சத்யதேவி அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலில் சத்யதேவி தனது சில அனுபவங்களை பதில்களாக நினைவு கூர்ந்திருந்தார். உங்கள் கணவர் சூசையை எவ்வாறு நீங்கள் முதன்முதலில் சந்தித்தீர்கள்? சூசை எல்.ரீ.ரீ.ஈ யில் பணியாற்றிய [...]