
கடந்த தானே புயலால் அதிகபடியான சேதம் ஏற்படும் என வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.இந்த நிலையில் அதே போல் புயலின் உக்கிரம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி கடல் அல்லாத மாவட்டங்களிலும் அதன் பாதிப்பு அறியப்பட்டது.புதுச்சேரி கடலூருக்கு இடையே இன்று காலை 6.30 முதல் 7.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது. தற்போது இது பலவீனமடைந்த தீவிர காற்றழுத்த மண்டலமாக கடலூர், புதுச்சேரி இடையே நிலை கொண்டுள்ளது. மேலும் பலவீனமடைந்து மேற்கு நோக்கி இது [...]

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை – வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் வெள்ளிகிழமை மதியம் தொடங்கியது.தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கலந்துகொண்ட இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், கட்சியின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் எவ்வித நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளுக்கும் ஆதரவு [...]

சிகிச்சைக்காக இந்தியா சென்ற பொழுது இறந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்ட முந்தைய தினம் அந்நபர் திடீரென உதயன் பத்திரிகை கொழும்பு அலுவலகத்திற்கு சென்று தான் உயிருடன் நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவல் வெளிவருமாறு,ஏழாலையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட தனஞ்சயன் (வயது 38) என்பவர் இந்தியாவில் உயிரிழந்தார் என்றும், அவரது சடலத்துடன் யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த 11 பேர் வாகனத்துடன் காணாமற்போய் விட்டனர் என்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் மற்றும் யாழ். மனித [...]

இலங்கை அரசின் அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வின் மத்தியிலும் இராணுவ நடமாட்டத்தின் நெருக்கடியின் மத்தியிலும் நமது ஈழத்தமிழ் உறவுகளின் வாழ்வியல் அங்கே நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த அரசியல் உயர் பீடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மாங்கனித் தீவில் நமது தமிழ் மக்களையும் அவர்தம் வாரிசுகளான இளைய தலைமுறையினர், மாணவ மாணவிகள் ஆகியோரை வதைத்தும் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைக்குள்ளாக்கும் அரசாங்கங்கள் எத்தனையோ ஆண்டுகளாக நடத்தி வரும் அடக்குமுறை ஆட்சிக்கெதிராக முதலில் சாத்வீகப் போராட்டங்களையும் பின்னர் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய நமது இனம் [...]

முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாக தான் உயிர் தியாகம் செய்வதாகக் கூறி, தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சின்னராசின் மகன் இராமமூர்த்தி விஷம் அருந்தி உயிர் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கொண்ட கொள்கைக்காக உயிரைத் துறப்பது என்பது தமிழினத்தின் [...]

தானே புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயலானது, இரு நகரங்களிலிருந்தும் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.புயல் நெருங்கியதைத் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புயல் குறித்த தகவல்: மிகத் தீவிர புயலான தானே, இன்று மதியம் 2.30 மணி நிலவரப்படி [...]

இலங்கையின் மலையகத்தில் ஹட்டன் பகுதியில் உள்ள நான்கு தேயிலைத் தோட்டங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் டிசம்பர் 13 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வெலிஓயா, புதுக்காடு, கண்டுகலா மற்றும் ஆக்ரோயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 2000 இற்கும் அதிகமான தொழிலாளர்களே தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்டிருக்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணாகஇ அதில் கூறப்பட்டிருக்கும் அளவை விட 3 கிலோ அதிகமாக தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்று [...]

தானே புயல் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா , தமிழீழத்தின் கடலோர பகுதிகளிலும் காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து தீவுப்பகுதி, வடமராட்சி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்.குடாக்கடல், முல்லைத்தீவுப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால் பல் கோடி ரூபாய் நஷ்டம் அடையும் என் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் பிரதேச மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொள்ளும் நோக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாக த. தே. கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மக்களை எவ்வாறு மீள் குடியேற்றுவது, மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதனை ஆராய்வதற்காகவும் இது தொடர்பில் முக்கிய சில தீர்மானங்கள் எடுப்பதற்காகவும் இவ்விஜயத்தை மேற்கொண்டதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பூர் பிரதேச மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கும், அனல் மின் நிலையத்தை [...]