
சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ஆம் தேதி [ இன்று ]மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது. ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது சிறப்புக்குரியது. இந்த நிகழ்வுக்கு தமிழக தலைவர்கள் பலர் வரவேற்று அழைப்பு விடுத்துள்ளதோடு தாமும் இதில் கலந்துகொள்கின்றார்கள். இந்நிகழ்வுக்கு தமிழக [...]

“புலம்பெயர் சமூகத்தை அரசியல் ரீதியாக விளங்கிக் கொள்ளல்” என்ற விவாதங்கள் தாயக மண்ணில் நடைபெறுகின்றன. முடக்கப்பட்ட போராட்டங்களிலிருந்து கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்கிற வகையில் அடிபணிவு அரசியலிற்கான புதிய தளமொன்று உருவாக்கப்படுவது போலிருக்கிறது. அது மட்டுமல்லாது, புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ச் சமூகத்தை விடுதலை வியாபாரிகள் என்றும் சிலர் விபரிக்க முற்படுகிறார்கள்.வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்பவர்கள், வரலாற்றையும், மக்களின் போராட்டத்தையும் நிராகரிக்கும் சிந்தனைக்குள் புதைந்து விடுவது அபத்தமாகவிருக்கிறது. தாம் வாழும் சொந்த சமூகத்தின் உளவியலைப் புரிந்து [...]

ஐக்கிய நாடுகள் அவையால் சித்ரவதையால் பாதிக்கப்பட்டொருக்கான சர்வதேச ஆதரவூ தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜீன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவூள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வூத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : இலங்கை அரசால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் சீமான் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ஆம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவூ தினமாக [...]

சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி ‘மே 17 இயக்கம்’ அழைப்பு விடுத்துள்ள மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ் இன உணர்வாளர்கள் பங்குபெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுல வரலாற்றில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுதான் சிங்கள அரசு இலங்கைத் தீவில் நடத்திய தமிழ் இனப் [...]

இன்று காலை Gloucestershire County Cricket Club , Nevil Road, Bristol எனுமிடத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 20-20 கிரிக்கற் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதை பார்வையிடச் சென்ற மக்களிற்கு ஐக்கியராச்சிய இளையோரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு சிறிலங்காவின் கோரமுகம் இனவழிப்பும் அதன் கொடூரம் பற்றியும் எடுத்துரைத்தனர். அங்கு வந்த மக்களில் அனேகர் எமக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். விளையாட்டுத் தொடங்கிய பின்னர் விளையாட்டினைப் பார்வையிட்டுக் கொண்டருந்த மக்களின் காதுகளிற்கு எட்டுமளவில் [...]

நேற்று 23.06.2011 வியாழக்கிழகை காலை 9.30 மணிக்கு பேர்ன் பாராளுமன்றத்திடம் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பாதே என்று தமிழர்கள் மத்தியில் சேர்க்கப்பட்ட 4844 கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பெர்பிரவரி மாதம் சுவிஸில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பப் போவதாக சுவிஸ் அரசு அறிவித்தது. தமிழர்கள் தொடர் இனப்படுகொலைக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் சுவிஸ் நாடு எடுத்த இம்முடிவுக்கு எதிராக சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளான சுவிஸ் ஈழத்தமிழர் அவையினர் காலதாமதமின்றிய [...]

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது. ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் [...]

தமிழ் மக்களின் வாழ்வு மட்டும் அழிக்கப்படவில்லை, போராட்டமுனைப்பும் அழிக்கப்பட்டுள்ளதென, சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலண்டன் கருத்தரங்கில், அரந்ததிராய் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, கவலை தெரிவிப்பதாலோ, அல்லது கண்டனம் செய்வதாலோ, எதுவித பயனுமில்லையென்று கருத்துரைத்த அருந்ததிராய், இப் போராட்டம் ஏன் பிழைத்துப் போனது என்பது குறித்து சுயபரிசோதனைக்கு உட்படும் வகையில் ஆழமான கலந்துரையாடல் ஒன்றின் தேவை உணரப்படுவதாக கூறினார். மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்கிற குறுகிய வரையறைக்குள் இதனை அடக்கி விடாமல், [...]

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை 23-ந்தேதி முதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது. கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை போரில் 1 1/2 லட்சம் [...]