ஒரு கனவைப் பகிர்வோம்
தமிழர்களை திருப்பி அனுப்பாதே!!! சுவிஸ் அரசிடம் தமிழர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று 23.06.2011 வியாழக்கிழகை காலை 9.30 மணிக்கு பேர்ன் பாராளுமன்றத்திடம் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பாதே என்று தமிழர்கள் மத்தியில் சேர்க்கப்பட்ட 4844 கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பெர்பிரவரி மாதம் சுவிஸில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பப் போவதாக சுவிஸ் அரசு அறிவித்தது. தமிழர்கள் தொடர் இனப்படுகொலைக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் சுவிஸ் நாடு எடுத்த இம்முடிவுக்கு எதிராக சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளான சுவிஸ் ஈழத்தமிழர் அவையினர் காலதாமதமின்றிய [...]
ஜூன் 26 கடற்கரையில் திரளுவீர் பழ. நெடுமாறன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது. ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் [...]