
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தங்களை நிர்பந்திக்கவில்லை என்று அதிபர் ராஜபக்ச கூறியுள்ளது இந்தியாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அரசுக் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு எந்த நிர்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச [...]

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காலை 11:00 மணிமுதல் கிறிக்கெட் பார்க்கச் சென்ற மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை இளையோர்கள் வழங்கல் செய்துகொண்டிருக்க, இளையோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாலை 5:00 மணி முதல் மக்களும் இணைந்து கொண்டனர். தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற [...]

உலக மனித சித்திரவதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஈழத்தில்உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ,சென்னை செல்ல வாய்ப்பு இல்லாதவர்களுக்கு மதுரையில் தமுக்கம் ,தமிழன்னை சிலை அருகில் ஈழத்தமிழர் கூட்டமைப்புகள் மதுரை, சார்பில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு அனைத்து அமைப்புகள் சார்பாக பெருமளவில் கலந்து கொண்டு எழுச்சி முழக்கம் இட்டனர் .பொறியாளர் தளபதி, பாண்டியன் ,தமிழ் கூத்தன்,செந்தில் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து இருந்தனர் .கவிஞர்கள் இரா .இரவி ,பொன் விக்ரம் உள்ளிட்டப்பலர் கலந்து [...]

கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி, ‘தினகரன்’ நாளிதழ் வெளியிட்ட சர்வே முடிவைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகையின் மதுரை அலுவலகம் மீது தி.மு.க. பிரமுகர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் கம்ப்யூட்டர் லே-அவுட் பிரிவில் பணியாற்றிய கோபிநாத், வினோத்குமார் மற்றும் செக்யூரிட்டி முத்துராமலிங்கம் ஆகியோர் இறந்தனர். இந்த வழக்கைப் பதிவு செய்த மதுரை ஒத்தக்கடை போலீஸார் அப்போது தி.மு.க-வின் தொண்டரணி அமைப்பாளராக இருந்த ‘அட்டாக்’ பாண்டி [...]

தேசத்தின்விடுதலைக்கா தமது உயிரை ஈகம்செய்த தமிழீழமண்ணின் மைந்தர்களின் நினைவாக வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்துக்கிளையும், வல்வைபுளுஸ் இங்கிலாந்துகிளையும் 26.06.2011 அன்று லண்டனில் நடாத்திய மாபெரும் நிகழ்வான கோடைவிழாவின் போது சரியாக மதியம் 1:30மணிக்கு அனைத்து உதைபந்தாட்டபோட்டிகளும்,மற்றையபோட்டிகளும் இடைநிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மேடைக்கு முன்பாக குழுமச்செய்தனர். பலஆயிரம் மைல்களுக்கு அப்பால்சென்னையில் மெரீனாக்கடற்கரையில் அதே நேரம் (இந்தியநேரம் மாலை6) முள்ளிவாய்க்கால் இன்ப்படுகொலையான எமது உறவுகளுக்காக மே பதினேழுஇயக்கம் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வுடன் நாமும் ஒன்றிணையும் ஒரு உணர்வுரீதியான நிகழ்வாக இது லண்டனிலும் [...]

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவில் தமிழீழத் தேசியக் கொடிக்கு பெரும் பிரச்சனை இருப்பதாகவே சிலரால் தொடர்ந்தும் காட்டப்படுகிறது. கொடியை பிடித்தால் பிரச்சனை, வெள்ளைகளுக்கு பிடிக்கவில்லை, காரியம் நிறைவேறாது என தடைகளை உடைக்க வேண்டியவர்களே தடைபோட்டு வருகின்றனர். பிரித்தானியாவில் தடை இல்லை என சட்டபூர்வமாக சாதித்துக்காட்டிய பின்னரும் இவர்கள் கேட்பது என்ன தெரியுமா? தடை இல்லையென்று நீதிமன்ற சான்றிதல்! எங்கே என்பதுதான்! சட்டத்தாரணிகளை நியமித்து ஒருமாத காலம் ஆய்வுக்குப் பின்னர் தரப்பட்ட அறிக்கை தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியச் சட்டப்படி எவ்வித [...]

இன அழிப்புச்செய்த சிறீலங்கா நாட்டின் கிறிக்கெட்டைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக நாளை (28-06-2011) மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது. The Kia Oval, Kennington, London, SE11 5SS என்ற முகவரியில் அமைந்துள்ள ஓவல் மைதானத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற இருக்கின்றது. [...]

பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறீலங்காவில் தற்போதுள்ள சூழலில் தமிழர்களை இங்கிருந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்குதுன்புறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத பாதுகாப்பற்ற நிலையே காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். சிறீலங்காவில் இடம்பெற்ற மற்ரும் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகளை நன்கு தெரிந்திருந்தும் தமிழ் அகதிகளை [...]

1948 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்மக்கள் தமது விடுதலை போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். 1976 ஆம் ஆண்டுஅனைத்து தமிழர்களும் வட்டுக்கோட்டை என்கின்ற இடத்தில் ஒன்று கூடி சுதந்திரதமிழீழமே தமிழ்மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்று வாக்கெடுப்பு நடத்தி முழுமையான வெற்றிகண்டார்கள் இந்த தீர்மானத்தின் அடிப்படையில் தீர்மானத்தை வலியுறுத்தி ஆயுதப்போராட்டத்தை தமிழ்மக்கள் நடத்தினார்கள். 1980 களில் தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் இந்திய ராஜீவ் அரசினால் மழுங்கடிக்க முயற்சிக்கப்பட்டது தமிழ்மக்கள் எதிர்த்து போராடினார்கள் இந்தி அமைதிப்படையினரால் 8500 ந்கு மேற்பட்ட தமிழர்கள் [...]

சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்தியது. இதில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டுள்ளனர்.