
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்நாட்டு அதிபரான அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் விளைவாக அங்குள்ள தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தலைநகர் சானா அருகே உள்ள ராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். செவிலியர்கள் மீதான தாக்குதல் முயற்சி தொடர்ந்து நடைபெற்று [...]

பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகவும் முன்னெடுக்கபட்டுவருகிறது. எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம் 11am 28-05-11# Swalec Stadium Glamorgan Cricket Cardiff CF119XR தொடர்புகட்கு Tel: 07539 444 824

1990ஆம் ஆண்டு பொஸ்னியாவில் நடைபெற்ற போர்க்குற்றத்திற்காக செர்பியன் படையனிகளின் முக்கிய பதவி வகித்தவரான ராட்கே மிலாடிக் என்பவரே செர்பியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7500 முஸ்லிம் ஆண்கள் மற்றம் இளைஞர்களை இவர் படுகொலை செய்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7500 பேரை கொலைசெய்யப்பட்டது இனப்படுகொலையாகவும் போர்க்குற்றமாகவும் அறிவிக்கப்பட்டே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செர்பிய அதிபர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதோடு கைதுக்கு உதவிய தனது படையணி வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தற்போது அதைப்பற்றிய செய்திகள் நேரிடையாக அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது . 7500 [...]

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்” – தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள். நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் [...]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் [...]

அன்பு தம்பி செந்தமிழன் சீமான் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கதவு எண்.8.மருத்துவமனை சாலை, செந்தில் நகர், போரூர்- 600 116, சென்னை தமிழகம், இந்தியா. கரு : காங்கிரசை வீழ்த்தியதற்கு செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்திற்கு வாழ்த்துகள் அன்புடையீர், கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி [...]

தமிழின அழிப்பு நினைவு நாள் கடந்த வாரம் உலகெங்கும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதன் ஓர் அங்கமாக கனடா தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழர் இன அழிப்பு மாதத்தினை ஒட்டி நடத்தப்பட்ட மரம் நடுகை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 22ஆம் திகதி டவுன்ஸ்வியூ பூங்காவில் நடத்தப்பட்டது. கனடா தமிழ் இளையோர் அமைப்பின் மார்க்கம் வாளாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பல மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுன்ஸ்வியூ பூங்கா நிர்வாகம் ஒழுங்கு [...]

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனுடத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு போன்றவற்றை மையப்படுத்தி வேற்றின சக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக இந்நிகழ்வு ஒரு முழுநாள் நிகழ்வாக ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் நடைபெற்றது. உலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைச் சட்டத்தின் 3ஆம் சரத்தின் அடிப்படையில் வாழும் உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை, பாதுகாப்பு போன்றவற்றை முன்னிறுத்தி சிறிலங்காவினால் இழைக்கப்பட்ட மேற்படி குற்றச் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய நாடுகள் சபையையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினையும் கோரும் விதத்தில் அதில் [...]

ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு. இது கூடிய விரைவில் நடக்கும்!” என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது. வேலூரில் கடந்த 18-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது. பாதையைத் தேடாதே… உருவாக்கு!’ [...]

தலைப்பபைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் , ஆனால் உண்மைதான் கே.பிதான் அப்படி கூறியிருக்கின்றார். தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் அதே போல்தான் தன்னை அறியாமலே மனதில் உள்ள உண்மையை கே.பி கூறியிருக்கின்றார். கே.பியின் பேட்டி பல ஊடகங்களில் வெளிவந்தது அதை உற்றுக் கவணியுங்கள், இரண்டுவிதமான உண்மைகள் அப்பட்டமாக வெளிவரும். ஒன்று எமது மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள் தயவு செய்து அவர்களை அமைதியாக வாழ விடுங்கள் என்று ஒன்றும் அமைதியாக வாழ உதவியும் [...]