Rste

எம்மைப்பற்றி

எமது தமிழீழ தேசத்தில் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது உலகெங்கும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு அடித்தளமிட்டவர்கள் பிரித்தானிய இளையோர்கள் என்றால் அது மிகையாகாது.

மக்களுடைய பேராதரவுடன் புரட்சி படைத்த போராட்டங்களின் தூன்களாகத் திகழ்ந்து மாணவர்களும் இளையோரும் உலகம் முளுவதும் மாபெரும் சக்தியாய் அணி திரண்டவர்கள்.

பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி பிரித்தானியா ஏற்பாட்டாளர்களால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. எப்பொழுதும் ஊர்வலம் வருவதும் பிரித்தானியக்கொடிகளை அசைத்துவிட்டு மனுவொன்றைக் கொடுப்பதுமாகவே பல போராட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டடன.

எமது மக்கள் கொன்று குவிக்கப்படும் இந்தவேளையிலும் இதே முறையை தொடரமுடியாதென முறன்பட்ட பல இளையோர்களும் மாணவர்களும் திடீரென வீதி மறியல்களில் ஈடுபட்டனர் இவர்களுக்கு பல ஆயிரம் மக்களும் பலத்த ஆதரவு வழங்கினார்கள்.உடனடி போர் நிறுத்தம் கோரி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்பு போர் மேலும் உக்கிரம் அடைந்தபோது ஏப்ரல் மாதம் 6ம் திகதி மீண்டும் மக்களுடன் இணைந்து மாபெரும் வீதி மறியலில் ஈடுபட்டனர் இதில் பல அமைப்புகளையும் சார்ந்த இளையோர்களும் மாணவர்களும் எழுச்சியுடன் ஈடுபட்டனர்.

மறியலின் நோக்கம் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்து போர் நிறுத்தம் வரவேண்டும் என்பதே அன்றி வேறு நோக்கம் எம்மிடம் இருக்கவில்லை. 6ம் திகதி ஆரம்பமாகிய வீதி மறியல் மறுநாள் 07.04.2009 காலை சுமார் 7 மணிவரை தொடர்ந்தது. பிரித்தானிய காவல்துறையின் நெருக்குதல் காரணமாக பாராளுமன்ற சதுக்கத்திற்கு தள்ளப்பட்டோம்.

மிக உக்கிரமான அந்த போராட்டம் தளர்வடைய தொடங்கியது ஆனால் அந்த போராட்டம் பிரித்தானியாவின் வரலாற்றில் நிலைக்கப்போவதையும் மேலும் 72 நாட்கள் நீடிக்கப்போவதை நாங்கள் உணர்ந்திருக்கவில்லை.

7ம் திகதி சிவதர்சன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதமே அதற்கு காரணமாக அமைந்தது. அவர்களின் முடிவுக்குப் பின் மேலும் பலர் உண்ணாநிலை மேற்கெண்டார்கள். இந்த போராட்டத்திற்கு பல தமிழ் அமைப்புகள் ஆதரவுகள் வழங்கி உதவிகள் பல செய்தனர். பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் போராட்டத்தை 73 நாட்கள் தொடர பேர்சொல்லக்தக்க சில இளையோர்களே அயராது பாடுபட்டனர்.

இந்த போராட்டத்தை நிறுத்த எம்மவர்கள் என்று சொல்லும் பலர் ஈடுபட்டனர். அனைத்தையும் தாண்டியே அந்த போராட்டத்தை நடாத்தி முடிக்கப்பட்டது. உண்மையில் யாரும் அந்த போராட்டத்திற்கு உரிமை கோர முடியாது {நாம் உட்பட}. ஏனெனில் அது இளையோர்களாளும் மக்களாளும் நடாத்தப்பட்ட போராட்டம்.

தமிழீழ திருநாட்டை கட்டியெழுப்ப இளையோர்களினதும் மாணவர்களினதும் மக்களினதும் ஒருங்கிணைந்த புரட்சியே நிச்சயமாக எம் விடுதலைக்குப் பலம் சேர்க்கும் என்று உறுதியாக நம்புகின்றவர்கள் நாங்கள். தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி ஆகிய மூலப்பொருளுடன் பயணிப்பவர்களே நாங்கள்.

சுய விருப்பு வெறுப்புகளை புரம் தள்ளி புதிய புரட்சிப் பாதையை வழிவகுத்து நான் பெரிது நீ பெரிது என்று வாழாது நாடு பெரிது என்று வாழ விரும்புகிறவர்களே நாங்கள்.

தேசத்தை மீட்டு எமது சுதந்திரத்தை நிலைநாட்ட உங்களையம் உரிமையோடு அழைக்கின்றோம்

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

May 2012
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins