கொள்கை
தமிழீழத்தின் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களே என்றும் தமிழீழத்தின் தேசியத் தலைவர் என்பதையும்,
தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசை தனித்தமிழீழமே, அக்கொள்கையில் பற்றுறிதியுடன் இருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதனையும்,
சுதந்திரத் தனித் தமிழீழமே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனையும் ஏற்று,
எமது தேசியக் கொடியின் கீழ் அணிதிரண்டு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தையும்,
அளப்பரிய அர்ப்பணிப்புக்களைப் புரிந்த மக்களையும் மனதில் நிறுத்தி,
தமிழீழத்தின் பிரதிநிதிகள் மீது விதித்திருக்கும் தடையை நீக்கி,
தமிழீழத்தின் விடுதலைக்காய் சிதறிக்கிடக்கும் இளையோர்களையம், மாணவர்களையும், மக்களையும் முழுவீச்சோடு இணைத்து எமது விடுதலைப் போராட்டத்தைப் புதிய வடிவங்களில் முன்னெடுத்துச் செல்வோம்.






